மனித உயிர்களை
உலகெங்கும் துச்சமாக்கி
அச்சமேயின்றி -மனிதப் பிரவாகமாய்
மிருகத் துறவறம் பூண்டு
சாந்த தப்ரபேன் எனும் தரையில்
பொதுச் சேவைகள் எனும் போக்கில்
பொது பல சேனா என உருவாகி
படம் எடுத்துத் திரியும் நாக பாம்பாய்
முஸ்லிம்களின் துஆ பலம் தெரியா மூடர்களாய்
துள்ளுகிறார்கள் பொதி சுமக்க
வேடம் பூண்ட வேடுவர் கூட்டமாய்
இத்தருணம்...
சத்திய வேதம் சார்ந்தவன்
மயல் கொண்டு தரையில் கிடப்பானா?
புயலென கொதித்தெழுவானா??
பதட்டத்திலும் பதகளிப்பிலும் சர்வதேசம்
குழப்பத்திலும் குத்தாட்டத்திலும் இனவாதம்
வெறுப்பிலும் சிரிப்பிலும் சனக் கூட்டம்
அலி போன்ற புலியின் வேகம்
எம்மிடம் உண்டு எதிர்க்க
அண்ணலாரின் சாந்த குணமோ
அமோகமுண்டு பாரினில் தழைக்க
இறைவா!!
இன்னும் இவ்விரண்டிலும்
இரண்டாவதில்தான் நிற்கிறோம் பொறுமையாய்
சீண்டிப் பாரக்கும் இச்சின்னத்தனமான வேலைகளை
இந்தச் சீடர்கள் இன்னும் எத்துனை நாள் பொறுக்கட்டும்..
No comments:
Post a Comment