விரகம் என்னை வதைத்தாலும்
நரகம் என்னைத் தீண்டினாலும்
கிரகங்கள் சேரும் வரையாவது-நான்
விரதம் இருப்பேன்
நூலிடையில் நுழையாத காற்றைவிட
தோலிடையில் நுழையும் காதல்
மேலானது என்பதற்காக.
நரகம் என்னைத் தீண்டினாலும்
கிரகங்கள் சேரும் வரையாவது-நான்
விரதம் இருப்பேன்
நூலிடையில் நுழையாத காற்றைவிட
தோலிடையில் நுழையும் காதல்
மேலானது என்பதற்காக.
No comments:
Post a Comment