ஒரு போதும் கலங்காத கடல் நீரை
கண்ணீர் கடலாய் மாற்றி விட்டு
சுவனம் செல்ல நீ முன்னே சென்று விட்டாயம்மா
எங்களை நரகக் குழிக்குள் தள்ளிவிட்டு
உனக்கு நடந்தது ஊமையொன்று கோள் சொன்ன கதை.
எமக்கு நடப்பது செய்தியொன்று கண்ணீரான கதை.
மாறிப் போன உலகில் நாறிப்போன நீதிகளை நினையாது
உன் ஆத்மா சாந்தியடைய இது சமர்ப்பணம்.
No comments:
Post a Comment