உனது இரவு நேர காத்திருப்பு
உன் சந்திப்பிற்காய் நான்
வேலியோரம் உனது தவம்
நீ தான் என் கண்ணில் பட்டாய்
தவிர
என்
காலில் பட்டது வேலிக்கம்பி
கண்ணில் பட்ட நீ
மெதுவாக மறைந்து விட்டாய்
என் இதயவறைக்குள்.
காலில் பட்ட கம்பி தந்த காயங்கள்
ஆறி விட்டாலும்
காதல் தந்த வடுக்கள்
இன்னும் என் வலிகளின் சன்மானமாக.
என்றும் என்னை சந்தோசப் படுத்துவதாக.....
No comments:
Post a Comment